மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
முழு நிலவின் இளமை,
அது தேய்வதில் தான்.
நம் மனதின் இளமை,
நாம் தாழ்வதில் தான்!!!
அன்பிற்க்கு பஞ்சமில்லை,
உயிர் நட்பிற்க்கு வஞ்சமில்லை.
பகைமைக்கு நெஞ்சமில்லை,
இந்த புத்தாண்டிலோ அதற்க்கு தஞ்சமில்லை!!!
பகைமையில்லா உலகம் காண்போம் இந்த புத்தாண்டில்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
நிலவே…
நீ உதித்தவுடன், பாடும்
அமைதியான தாலாட்டை கேட்டு
இந்த உலகமே உறங்குகிறது
நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!
வா…
என் மடியில் வந்து கண் மூடு
நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…
அண்று –
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.
–
இன்று –
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!
–
அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!
நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!
இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!
ஏர் பூட்டி உழுது,
செழிப்பானதோ
இந்த ஏற்காடு
***
பச்சை மனம் மாறாப்
பிள்ளை போல, இன்றும்
பச்சை நிறம் மாறாக்
காடு, இந்த ஏற்காடு
***
எழைகளின் ஊட்டி,
என்றும்
மாசு படாத ஊட்டி
இந்த ஏற்காடு
நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?
உன்னை மறக்க நினைத்தாலே,
என் நினைவாக நீ வருகிறாய்.
உன்னை நான் நினைத்தாலோ,
என்னையே மறக்க செய்கிறாய்.
உன்னை மறக்க நினைப்பதா ?
இல்லை நினைத்து என்னை மறப்பதா ?
மழையே…
சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்
நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்
தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்
பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை
Sorry, you are not allowed to access this page.