| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| « Feb | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
Posted on February 28th, 2008 by dhans.
Categories: உண்மை, புலம்பல், மொக்கை.
தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!
தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே
தப்பா செஞ்சா தான் தப்பு!!!!
இந்த காலத்துல,
தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.
தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.
தப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.
அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.
Posted on February 26th, 2008 by dhans.
Categories: இயற்கை, கருத்து, மழை.

மாலைச் சூரியனே…
சென்று வா, இரவை வென்று வா!!!
நீ வெல்லும் போது,
எங்கள் பொழுது விடியும்!
சில சமயம் நீ தோற்கும் போது,
உன்னை மறைக்கும் அந்த
மழை மேகம் கூட கண்ணீர்விடும்!
Posted on February 21st, 2008 by dhans.
Categories: எதார்த்தம், கேள்வி.
கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …
அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …
இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …
இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …
இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …
எது கடினம்?

Posted on February 20th, 2008 by dhans.
Categories: உண்மை, மொக்கை.
மது மாது,
இவை இரண்டையும்,
தொடாதவன் வாழ்க்கை கேலி!
தொட்டவன் வாழ்க்கையில்
மற்றதெல்லாம் போலி!!!
Posted on February 18th, 2008 by dhans.
Categories: உண்மை, தத்துவம், வாழ்க்கை.
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!